Categories: சினிமா

கலைஞர் கிட்ட அன்னைக்கு சொன்ன வார்த்தை.. இன்று வரை குற்ற உணர்ச்சியில் இருக்கும் ரஜினி.. அப்படி என்ன நடந்தது..?

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. சூப்பர் ஸ்டார் என்று ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ரஜினி தனக்கு வயசானாலும் நடிப்பில் குறை வைக்காமல் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ரஜினி சினிமாவில் பிஸியான நடிகராக நடித்து வருகின்றார். இந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ரஜினியின் ஒரு படத்திற்கு வசனம் எழுத தயாராகிய போது ரஜினியால் அதனை கலைஞர் மறுத்துள்ளார்.

அதாவது 1980 ஆம் ஆண்டு ரஜினி ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தத் திரைப்படத்தின் வசனங்கள் தயாரிப்பாளருக்கு திருப்தி தரவில்லை. படம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரஜினியிடம் சென்று, நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை சொல்கிறேன், நம் படத்திற்கு கலைஞர் அவர்கள் வசனம் எழுத ஒப்புக்கொண்டார் என்று மகிழ்ச்சியுடன் கூறிய நிலையில் அதை கேட்டதும் ரஜினிக்கு தூக்கி வாரி போட்டுள்ளது. எளிமையான தமிழ் வசனங்களை பேசி நடிப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கும் நாம் கலைஞரின் வசனங்களை எப்படி பேசி நடிக்க முடியும் என்று யோசித்துள்ளார். பிறகு கலைஞரை நேரில் சந்தித்து இந்த விஷயத்தை கூற ரஜினி சென்றுள்ளார்.

அங்கு சென்று அவரிடம் இந்த விஷயத்தை கூறி ரஜினி அமைதியாக அமர்ந்து கொண்டிருந்த நிலையில் ரஜினியின் தர்ம சங்கடத்தை புரிந்து கொண்ட கலைஞர் தயாரிப்பாளரிடம் எனக்கு வேறு வேலைகள் இருப்பதால் என்னால் இந்த படத்திற்கு வசனம் எழுத முடியாது என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரின் மனதையும் துன்புறுத்தாமல் ரஜினியையும் திருப்திப்படுத்தும் வகையில் கலைஞர் அந்த செயலை செய்துள்ளார். ஆனால் கலைஞரின் வசனங்களை பேசி நடித்து இருக்கலாமோ, தவறு செய்துவிட்டோமோ என்று இன்றும் ரஜினிக்கு குற்ற உணர்ச்சி உள்ளது.

Nanthini

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

7 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

8 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

8 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

8 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

9 மணத்தியாலங்கள் ago