தமிழ் சினிமாவில் 70களில் தொடங்கி 90கள் வரை மிரட்டலான வில்லனாக பலம் வந்தவர் தான் நடிகர் ராதாரவி. அவருடைய வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சத்யராஜ் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ராதாரவி தற்போது ஆர்விஆர் ஸ்டூடியோ தயாரிப்பில் இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி தோட்டா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ராதாரவி மற்றும் ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாரவி, எனக்கு இப்போ 71 வயசு ஆகுது. இன்னைக்கு சென்னையில முதல் முறையா ஸ்வெட்டர் போட்டுட்டு சுத்திட்டு இருக்கேன். காரணம் எனக்கு காய்ச்சல்.
முன்ன இருந்த மாதிரி இப்ப இல்ல வயசு ஆயிருச்சு எல்லாமே மாறிடுச்சு. நானும் கதாநாயகனா பல படத்துல நடிச்சிருக்கேன். ஆனா இப்ப கதாநாயகன் என்று பலர் என்ன சொல்லிட்டு இருக்காங்க. இப்படி சொல்லி சொல்லி தான் என்னோட பொழப்பை கெடுத்துட்டாங்க. நீங்க இப்படி சொல்லிட்டு இருந்தா இவன் கதாநாயகனா மட்டும்தான் நடிப்பான் போல இவனுக்கு எதுக்கு நாம ஒரு கேரக்டர் கொடுக்கணும் என்று நினைத்து யாரு என்ன கூப்பிடாம விட்டுருவாங்க. இந்த வேலையை யாரும் பண்ணாதீங்க என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…