#image_title
கங்கை அமரனின் மகனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜிக்கு நேற்று முன்தினம் கோவிலில் வைத்து திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் நடந்து முடிந்தது. முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். அவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது. அவரது திருமண அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இது குறித்து வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, நண்பர் ஒருவர் தெரியாமல் சோசியல் மீடியாவில் பத்திரிகையே பகிர்ந்து விட்டார். நாங்கள் எளிமையாக திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறோம். நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
விரைவில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரையும் சந்திப்போம் .அதுவரை காத்துக் கொண்டிருங்கள் என கூறினார். அதன் பிறகு திருமணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. பிரேம்ஜியின் மனைவி இந்து ஒரு வங்கியில் வேலை பார்த்துள்ளார். கடைசியாக பிரேம்ஜி சத்திய சோதனை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.
மன்மத லீலை படத்தில் இசையமைப்பாளராக வேலை பார்த்தார். பிரேம்ஜி யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பெரும்பாலான பாடல்களை பிரேம்ஜி பாடியுள்ளார். பிரேம்ஜியின் திருமண புகைப்படங்களும் சில வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் திருமணத்திற்கு முன்பு பிரேம்ஜியின் மனைவி கையில் மெஹந்தி போட்டுள்ளார்.
அதனை பிரேம்ஜியிடம் காண்பித்துள்ளார். அதனை பார்த்தவும் பிரேம்ஜி வெட்கத்துடன் மெஹந்தி டிசைன் மற்றும் அதில் உள்ள எழுத்துக்களை கண்டுபிடிக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. முரட்டு சிங்கிள் பிரேம்ஜி கல்யாணம்னு வந்ததும் இப்படி வெட்கப்படுகிறாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
2008-ம் ஆண்டு இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சுப்ரமணியபுரம். மதுரை கதைகளத்தில் அழுத்தமான திரைக்கதை மூலம்…
106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…
பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…
நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…
எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…