Categories: சினிமா

அந்த படத்தை பார்த்துட்டு ஒரு வாரமா என் வீட்ல யாரும் என்கிட்ட பேசல.. அவ்ளோ சாபம் விட்டிருப்பாங்க.. மனம் திறந்து பேசிய நடிகர் பொன்னம்பலம்..!!

Spread the love

90ஸ் காலகட்டத்தில் வில்லனாக வந்து மிரட்டியவர் நடிகர் பொன்னம்பலம். இவர் 1988 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கலியுகம் படத்தின் மூலம் நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்தார். முதலில் சண்டை கலைஞராக இருந்த பொன்னம்பலம் தனது திறமையால் நடிகராக முன்னேறினார். சத்யராஜ் நடிப்பில் ரிலீசான வால்டர் வெற்றிவேல் படத்தில் கபாலி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் பொன்னம்பலம் நடித்தார்.

இதன் மூலம் அவர் பிரபலமடைந்தார். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், வெற்றி விழா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் பொன்னம்பலம் நடித்துள்ளார். நாட்டாமை படத்தில் பொன்னம்பலத்தின் நடிப்பு மிரட்டலாக இருக்கும். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு விஜயகாந்த் சௌந்தர்யா நடிப்பில் தவசி திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படத்தில் கோட்டை பெருமாள் கதாபாத்திரத்தில் பொன்னம்பலம் நடித்துள்ளார். சமீபத்தில் பொன்னம்பலம் அளித்த பேட்டியில் கூறியதாவது, தவசி படத்தில் அந்த ஊமை பெண்ணை படாத பாடு படுத்துவேன். புழுவை நசுக்கிற மாதிரி ஒரு கேரக்டர். ரொம்ப முரட்டுத்தனமாய் இருக்கும். நான் தியேட்டர்ல தான் படத்தை பார்த்தேன். அந்த சீனை பாக்கும்போது எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சு. ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட்டா அது ஒரு நல்ல படம்.

அந்த படத்தை என் பையன் பொண்ணு எல்லாரும் என்ன ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு வாரமா என்கிட்ட யாருமே பேசல. அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது என் வீட்டில் எல்லாரும் குடும்பத்தோடு போய் படம் பார்த்துட்டு வந்துருக்காங்கன்னு. நானும் என் மனைவியும் சேர்ந்து பார்த்த ஒரே படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் தான். அதுக்கப்புறம் நாங்க சேர்ந்து படம் பார்த்ததே கிடையாது. அவங்க எல்லாரும் தியேட்டர்ல போய் தவசி படத்தை பார்த்துட்டு வந்து என்கிட்ட பேசவே இல்ல என கூறியுள்ளார்

admin

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

8 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

8 மணத்தியாலங்கள் ago