தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் பாரி இளவழகன். ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவுக்குள் நுழைந்த இவர் அதற்காக முறைப்படி நடிப்பை கற்றுக் கொண்டார். பிறகு உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் சில குறும்படங்களையும் எடுத்துள்ளார். வைப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வந்த இவர் ஒரு சில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தன்னை ஒரு நடிகராக நிரூபித்து காட்ட மிகவும் சிரமப்பட்டவர். யானை தீயவன், சென்னை பழனி செவ்வாய் மற்றும் சமீபத்திய ஜே பேபி போன்ற பல திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜமா என்ற திரைப்படம் மூலம்தான் இவர் இயக்குனராக அறிமுகமானார்.
இந்தத் திரைப்படத்தை இவரே இயக்கி நடித்திருந்த நிலையில் இளையராஜா இசை அமைத்திருந்தார். படத்தில் பெண் வேடங்களில் நடிக்கும் தெருக்கூத்து கலைஞராகவும் பாரி இளவழகன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண் பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பாட்டில் ராதா. இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில் குரு சோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன் மற்றும் இதர பல நடிகர்களும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எனக்கு சினிமாவில் முதல் பட வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணமே லஷ்மி ராமகிருஷ்ணன் மேம்வோட கணவரால் தான். நான் கல்லூரி படிக்கும் போது அவர்தான் எனக்கு ப்ரொபசரா இருந்தாரு. அப்பாவே ரொம்ப தொல்லை பண்ணிட்டு இருப்பேன். மேடம் கிட்ட சொல்லி எப்படியாவது எனக்கு சினிமாவுல ஒரு வாய்ப்பு கொடுங்க என்று அவர்கிட்ட சொன்னேன். உடனே அவர் எத்தனை அரியர் வச்சிருக்க என்று கேட்டார்.
ஒரு அரியர் என்று சொன்னதும் முதலில் படித்து அதை கிளியர் பண்ணு நான் உனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தரேன் என்று சொன்னாரு. அதுக்காகவே சின்சியரா படிச்சு அரியர் கிளியர் பண்ணேன். அதுக்கப்புறம் சார் சொன்ன மாதிரியே மேடம் கிட்ட கூட்டிட்டு போய் எனக்கு சினிமாவுல நடிக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்தாரு என சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்த அனுபவம் குறித்து பாரி இளவழகன் பேசியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12…
ஹைதராபாத் பசவதாரகம் நகரைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை ஒருவர், தனது கணவர் மீது பிலிம்நகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான…
தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டியில், காதலனுக்காகப் பெற்றோரைக் கொன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சுரேகா என்ற இளம் செவிலியர்…
இந்தக் காணொளி மனிதநேயமும் அன்பும் தோற்றத்தைக் கடந்தது என்பதை மிகவும் அழகாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் உணர்த்துகிறது. சாலையில் திரியும் ஒருவரைச் சமூகம்…
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் திருமணமான ஒரு பெண், தனது கணவர் மற்றும் காதலன் ஆகிய இருவருடனும் ஒரே…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில், நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் அபூர்வமான குழந்தை…