தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டியில், காதலனுக்காகப் பெற்றோரைக் கொன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சுரேகா என்ற இளம் செவிலியர் தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த சுரேகா, கடந்த ஜனவரி மாதம் தனது சொந்தப் பெற்றோருக்கு உணவில் விஷம் வைத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரைக்கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபத்தில் நீதிமன்றப் பிணையில் சிறையிலிருந்து வெளிவந்த சுரேகா, சங்கா ரெட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அங்கு தனக்கு தானே விஷ ஊசிசெலுத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதலனுக்காகப் பெற்றோரைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட செவிலியரின் இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…
விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக வடிகால் வாய்க்காலில் நழுவி விழுந்து, மூழ்கும் அபாயத்திற்கு உள்ளானாள். நீச்சல் தெரியாததால் அவள்…
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் 'No Bag Day'…
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், எலும்பியல் மருத்துவரான யோகேந்திர ஜெய்ஸ்வால் மீது நோயாளியின் மகன்…