#image_title
தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.
ஆனால் அவரின் தொடக்கக் காலம் மிகுந்த போராட்டம் உடையதாகதான் இருந்தார். படங்களில் வேடம் கிடைப்பதற்காக அவர் பல நாட்கள் போராடினார். அப்படியே சிறுசிறு வேடங்கள் கிடைத்தாலும் அவருக்கு சரியான சம்பளம் கிடைக்காது. இந்த பிரச்சனை அவர் ஓரளவுக்கு முன்னணி நடிகராக வளர்ந்த பின்னரும் தொடர்ந்துள்ளது.
நானும் ஒரு பெண் என்ற படத்தில் அவரை நடிக்க வைக்க ஏவிஎம் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அப்போது அந்த படத்துக்காக நாகேஷ் 10000 ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் ஏவிஎம் நிறுவனமோ 5000 ரூபாய்தான் தருவேன் என சொல்லியுள்ளது. பேரம் பேசி கடைசியில் 6000 ரூபாய்க்கு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் நாகேஷ்.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் ஏவிஎம் சரவணனை அழைத்து “சார், நான் சம்பள விஷயத்தில் இப்படி பேரம் பேசுகிறேனே என நினைக்காதீர்கள். கூடிய சீக்கிரமே நான் கேட்கும் சம்பளத்தை பேரம் பேசாமல் நீங்கள் கொடுக்கக் கூடிய காலம் வரும்” என சவால் விட்டுள்ளார். அவர் வார்த்தை பலித்து சில ஆண்டுகளிலேயே சர்வர் சுந்தரம் படத்தில் கதாநாயகனாக நடிக்க நாகேஷை அணுகியது ஏவிஎம் நிறுவனம். அப்போது அவர் கேட்ட சம்பளத்தை அப்படியே பேரம் பேசாமல் கொடுத்துள்ளனர்.
பிரிட்டனின் வால்சால் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது பர்மிங்காம்…
மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…
தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…