Categories: சினிமா

எம்ஜிஆருக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்கல.. பிறகு அவர் செய்த செயலால் கண்ணீர் விட்டு காலில் விழுந்த நபர்.. இதுதான் மக்கள் திலகம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார். தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு திரைப்படத்தை யாரும் பார்த்திருக்க முடியாது என்று மக்கள் போற்றும் திரைப்படங்கள் தான் மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரைப்படங்கள்.

சினிமாவில் மக்களின் பேராதரவை பெற்று முன்னணியின் நடிகராக திகழ்ந்த எம்ஜிஆர் முதலில் நடிக்க வந்த காலத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஒரு ஷூட் முடிந்ததும் அடுத்த ஷூட்க்கு அழைக்கும் வரை எங்கேயும் செல்லாமல் செட்டுக்கு வெளியிலேயே அமர்ந்திருப்பாராம். அப்படி ஒரு நாள் அமர்ந்திருக்கும் போது மிகவும் தாகம் எடுத்ததால் அந்த ஸ்டுடியோவில் வேலை பார்த்த அப்பன் என்பவரிடம் ரொம்ப தகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டுள்ளார். உடனே அவர், நான் பெரிய ஹீரோக்களுக்கு எல்லாம் ஜூஸ் கொண்டு போயிட்டு இருக்கேன் உனக்கு நான் எதுவும் தர முடியாது என்று வெறுப்பாக பேசி உள்ளார்.

பிறகு எம்ஜிஆர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்த பிறகு அந்த ஸ்டூடியோவை விலைக்கி வாங்கி தன்னுடைய அம்மா பெயரை வைத்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வேலை பார்த்து அப்பன் , இவர் நம்மள வேலையை விட்டு அனுப்பிடுவாரு என்று பயத்துடன் சென்றுள்ளார். உடனே அவரை அழைத்த எம்.ஜி.ஆர் உனக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டதும் 200 ரூபாய் என அவர் கூறியுள்ளார். இல்லை இனிமேல் உனக்கு 400 ரூபாய் சம்பளம் என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு கண்ணீர் விட்டபடி அப்பன் எம்ஜிஆர் காலில் விழுந்தார். இதுதான் மக்கள் திலகம்.

Nanthini

Recent Posts

BREAKING: பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு மாரடைப்பு… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

2 minutes ago

“மேடையிலேயே கண்கலங்கிய எடப்பாடியார்”… கையெடுத்து கும்பிட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை… அதிர்ந்த எடப்பாடி தொகுதி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…

6 minutes ago

“உங்களுக்கு அனுமதியில்லை” ட்ரம்பை வெளியே நிறுத்திய ராணுவம்… அதிரடி ஆப்பரேஷனில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்..? கசிந்த ரகசியத் தகவல்கள்..!!

ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…

7 minutes ago

“விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி”.. திருச்சியில் ‘திக் திக்’ நிமிடங்கள்… தந்தி டிவி வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்… கலக்கத்தில் தொண்டர்கள்,,,!

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…

15 minutes ago

“முயல் பிடித்துத் தருவதாக ஆசை வார்த்தை”… 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… வேலூரில் நடந்த பகீர் சம்பவம்…!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…

19 minutes ago