CINEMA
“திக் திக் நிமிடங்கள்”…. கடைசி நேரத்தில் கூட யாரிடமும் உதவி கேட்காத நடிகர் மாரிமுத்து….!!
எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோதே அவருக்கு அசௌகரியமாக இருந்ததால் அவர் வெளியே வந்தார். அங்கிருந்த நடிகர் கமலேஷ் கேட்டபோது தனக்கு அசௌகரியமாக இருக்கிறது எனவும், வேறு ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் யாருடைய உதவியையும் கேட்காமல் நடிகர் மாரிமுத்து தானாகவே கார் ஓட்டி அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனை பார்க்கிங் ஏரியாவில் நிலைதடுமாறிய மாரிமுத்துவுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. தன் வாழ்வின் கடைசி நிமிடங்களிலும் நடிகர் மாரிமுத்து யாருடைய உதவியும் நாடவில்லை.