
CINEMA
மனைவியின் 25 வருட ஆசை…. இறப்பதற்கு முன்பு நிறைவேற்றிய நடிகர் மாரிமுத்து…. வைரலாகும் புகைப்படம்…!!
பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பால் காலமானார். இவர் எதிர்நீச்சல் மூலம் மக்களிடையே பிரபலமானவர். இவரது இறப்பை பலரும் நம்ப மறுக்கின்றனர். பல வருடத்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமான மாரிமுத்து பல இன்னல்களை சந்தித்தார். மாரிமுத்துவுக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார்.
பாக்கியலட்சுமிக்கு தனது கணவர் கையால் மல்லிகை பூ வாங்கி வைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியின் போது மாரிமுத்து தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவருக்கு மல்லிகை பூ வாங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.