‘அப்பா சொன்னது இதுதான்’… ‘அப்பாவுக்காக இதை நான் கண்டிப்பாக செய்வேன்’… மறைந்த நடிகர் மாரிமுத்து மகனின் கலங்க வைக்கும் பேட்டி…

By Begam

Published on:

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.  நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 1994ஆம் ஆண்டு பாக்கியலட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்ட மாரிமுத்துவிற்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

   

இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை.  57 வயதாகும் இவருடைய மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தற்பொழுதும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது இவரது உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டு விட்டது.

தற்பொழுது இவரின் இறப்புக்கு ஜோசியக்காரர்களை இவர் மதிக்காமல் பேசியதும்,  அவர்கள் விட்ட சாபமும் ஒரு காரணம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அப்பாவின் இறுதி சடங்குகளை முடித்து விட்டு அவரது மகன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘தன்னுடைய தந்தை தனக்கு பல விஷயங்களை சொல்லி தந்து விட்டு போயிருக்கிறார்.

எந்த விஷயத்திலும் முற்போக்காக இருக்க வேண்டும். எந்த மூடநம்பிக்கையும் ஏற்கக் கூடாது என்று கூறி இருக்கிறார். இறுதி சடங்கில் கூட அவர் பெரிய அளவில் எல்லாம் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார். அவருடைய கனவுகள்`, அவர் ஆசைப்பட்டது எல்லாவற்றையும் நான் இனி செய்து முடிப்பேன். அப்பா என்னிடம் பேசும்போது பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதை நாங்கள் கடைபிடிப்போம்’ என்று கூறி கூறியிருந்தார். இதோ அந்த வீடியோ…