தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர்களில் ஒருவர்தான் மனோபாலா. இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தார். இப்படி பல புகழுக்குரிய மனோபாலா கடந்த வருடம் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான நிலையில் மனோபாலா பாரதிராஜா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய ஒரு பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வெறும் மூன்றே நாளில் உருவானது தான் புதிய வார்ப்புகள் கதை. இந்த படத்திற்கு கதாநாயகி முடிவாயிட்டாங்க ஆனா கதாநாயகன் மட்டும் கிடைக்கல. லக்ஷ்மிகாந்த் என்ற போட்டோகிராபரை வைத்து போட்டோ எடுக்கணும்.

அதே சமயம் என்னோட டைரக்டர் கிட்ட நான் இருக்கும்போது கதாநாயகன் கதாநாயகி எல்லாம் நான்தான் ஃபோட்டோ எடுப்பேன். கதாநாயகன் மட்டும் கிடைக்கல மத்ததெல்லாம் ரெடி ஆகி படத்தின் சூட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க. அன்னைக்கு கண்ணதாசன் முதல் முறையா நாம் பக்கத்துல பார்த்தேன். அது மட்டுமல்லாமல் அவர் எழுதற வரிகள காப்பி எடுக்கிற வேலை எனக்கு கிடைத்தது. காப்பி எடுத்து மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி அம்மாவுக்கு கொடுத்து டேக் போயிட்டு இருக்கு. அப்போ பாரதிராஜா என்ன கூப்பிட்டு லஷ்மிகாந்தை கூட்டிக்கிட்டு கூடவே பாக்கியராஜையும் கூட்டிட்டு வா. ஒரு ஊரில் இருந்து வரும் வாத்தியார் எப்படி இருப்பாரோ அதுபோல கையில ஒரு பெட்டியை கொடுத்துட்டு பெரிய கண்ணாடி போட்டுட்டு குடையும் பிடிச்சுகிட்டு இருக்க மாதிரி ஒரு போட்டோ எடு என்று என்கிட்ட சொன்னாரு.

என்ன சார் சொல்றீங்க அவர் ஹீரோவா என்று நான் கேட்டதும் பேசாம போட்டோவை எடு என்று சொல்லிட்டாரு. டயலாக் எழுதிட்டு இருந்த ராஜனை கூப்பிட்டு வந்து உச்சகட்ட கடுப்புல அன்னைக்கு நான் போட்டோ எடுத்தேன். அப்படிதான் முதன் முதலில் நான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேரும் போது நிறைய சிகரெட் குடிப்பேன். முதல் முறை அவரை சந்திக்க செல்லும்போது என் பேரு மனோபாலா கமல்ஹாசன் உங்ககிட்ட அனுப்பி வச்சாரு என்று ஒரு திமிரா பேசுன.
சரின்னு அவரும் என்னை உள்ள கூட்டிட்டு போய் கதைய சொன்னாரு. பாதி கதையை கேட்டதும் அவர வெளியில கூட்டிட்டு வந்து இது சுத்தமா ஓடாது என்று நான் சொல்லிட்டேன். நிறைய படம் பாக்குறவன் நான் எனக்கு நிச்சயம் தெரியும் இந்த கதை ஓடாது என்று வெளிப்படையாக அவர்கிட்ட சொன்ன. அன்னைக்கு அவர் புதுசா ஒரு கம்பெனி ஆரம்பிக்க போறாரு. அப்போ பாக்கியராஜ் எங்க என்று நான் கேட்டதும் அவனை திட்டி அனுப்பிச்சிட்டேன் என்று என்கிட்ட சொன்னாரு. உடனே நான் போய் பாக்கியராஜை சமாதானப்படுத்தி அன்னைக்கி கூட்டிட்டு வந்த என்று பாரதிராஜா உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மனோபாலா பேசியுள்ளார்.
