காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர் தான் நடிகர் மணிகண்டன். ஜெய் பீம் படத்தில் அவருடைய நடிப்பின் மூலமாக அனைவருடைய கவனத்தை ஈர்த்திருந்தார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார்.

இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன் ,ஆர் ஜே சிவசங்கரி, பிரவீன் ராஜா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். மேலும் இவர் குட் நைட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்திற்கு “மக்கள் தலைவன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காலா படத்தில் மணிகண்டனை அறிமுகப்படுத்திய பா.ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கிறார். பாரஞ்சித்தின் ஏ.டி.குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
