“கரண்ட் இல்லைனா என்ன..? 6 மாசம் அட்ஜஸ்ட் பண்ணுங்க…!” – நடிகர் மகேந்திரனின் பேச்சால் கொதிக்கும் நெட்டிசன்கள்…!!

Spread the love

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இளவயது விஜய் சேதுபதியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மகேந்திரன். குழந்தை பருவத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், கதாநாயகனாக தனக்கான ஒரு நிலையான வெற்றியைப் பெற போராடி வரும் இவர், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணல் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேர்காணலில் தமிழகத்தின் தற்போதைய மின்வெட்டுப் பிரச்சனை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மகேந்திரன், “மின்சாரத்துடன் இவ்வளவு நாள் ஜாலியாக இருந்தவர்கள் ஒரு ஆறு மாதம் அது இல்லாமல் இருக்க முடியாதா? என் வீட்டில் இருந்து கூட மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், சோலார் வழியாக எடுத்துக்கொள்ளுங்கள், கேள்வி கேட்காதீங்க. முதல்வரை கேள்வி கேட்பதால் உடனே மின்சாரம் வந்துவிடுமா? ஆறு மாதம் எதுவும் கேட்காதீங்க, எதாவது கேட்டுகிட்டே இருக்கீங்க” என்று மிக அலட்சியமாகப் பேசினார். மக்களின் அத்தியாவசியத் தேவையான மின்சாரம் குறித்து, பொறுப்பற்ற முறையில் அவர் பேசிய இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

இவரது இந்த பேச்சுக்கு பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சாதாரண நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மின்வெட்டால் படும் துயரங்களையும், வெயிலின் தாக்கத்தையும் அறியாமல், ஒரு ஏசி அறையில் அமர்ந்துகொண்டு மகேந்திரன் இப்படிப் பேசுவது கண்டிக்கத்தக்கது என பலரும் சாடி வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி கேட்பது ஜனநாயக உரிமை என்றும், அதைத் தட்டிக்கழிக்கச் சொல்வது அறியாமை என்றும் கூறி மகேந்திரனின் கருத்துக்கு எதிராக தங்களது கண்டனங்களை இணையத்தில் தீவிரமாகப் பதிவு செய்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

யாரெல்லாம் மகளிர் உரிமைத்தொகை பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள்?… அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட அதிரடி விபரம்…!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகவும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை…

6 minutes ago

72 உயிர்கள்… 1153 கடைகள் காலி… 11 வயது சிறுவன் செய்த விபரீதம்… கராச்சி தீ விபத்தின் வெளியான அதிர்ச்சி உண்மை…!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பிரபல குல் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ…

27 minutes ago

யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்… ரூ.1 லட்சம் பரிசு வாங்க தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாஸ் அறிவிப்பு…!

சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் முன்வந்து மிகச் சிறந்த முறையில் சமூகச் சேவை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு…

37 minutes ago

போலி ‘திருமண ஒப்பந்தம்’… மதம் மாற கட்டாயம்… உத்திரபிரதேசத்தில் அம்பலமான வீட்டு முதலாளியின் கொடூரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

47 minutes ago

மனைவியின் அந்த ஒரு பழக்கம்… கோபத்தில் கணவன் செய்த விபரீதம்… : 12 நாட்கள் மறைந்திருந்த அதிர்ச்சி உண்மை… கணவன் வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்…!

கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…

57 minutes ago

அரசாங்கத்தின் அலட்சியத்திற்கு பலியான உயிர்… நெல் மூட்டைகளுக்கு நடுவே சிக்கி மூச்சுத்திணறி இறந்த பெண்… தஞ்சை நெல் கிடங்கில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…

1 மணத்தியாலம் ago