நடிகர் மாதவன் தனது மனைவி சரிதாவை முதன்முதலில் சந்தித்தது மற்றும் அவர்களது காதல் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் ஆளுமைத் திறன் மேம்பாடு (Personality Development) மற்றும் தகவல் தொடர்புத் திறன் (Communication Skills) போன்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியராகப் பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது, மாதவனிடம் மாணவியாகப் பயின்றவர் தான் சரிதா பிர்ஜே. பொதுவாகத் திரைத்துறையினர் பார்ட்டிகள் அல்லது படப்பிடிப்புத் தளங்களில் சந்தித்துக் கொள்வதைப் போலன்றி, தாங்கள் ஒரு வகுப்பறையில்தான் முதன்முதலில் சந்தித்துக் கொண்டதாக மாதவன் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியராக இருந்த அவருக்கும், மாணவியாக இருந்த சரிதாவுக்கும் இடையே உருவான அந்தப் பழக்கம் பின்னாளில் காதலாக மலர்ந்து, திருமணத்தில் முடிந்தது. மாதவனின் நிஜ வாழ்க்கைக் காதல் கதையை அறிந்த அவரது ரசிகர்கள் தற்போது அதனைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) பரப்புரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் தாடி பாலாஜி திடீரென விலகியுள்ளார். கடந்த ஆண்டு…
அதிமுக தலைமையின் மீதான கடுமையான நம்பிக்கையின்மையால் தான், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்களை மாற்றிக்கொண்டு தானாகவே தவெகவில் இணைந்து வருவதாக…
நீட் (NEET-UG 2026) வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ (CBSE) தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக, நாட்டின் கல்வித்துறையையும் லட்சக்கணக்கான மாணவர்களின்…
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து…
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே உணவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரிடம்…