நடிகர் மாதவன் தனது மனைவி சரிதாவை முதன்முதலில் சந்தித்தது மற்றும் அவர்களது காதல் உருவான விதம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் ஆளுமைத் திறன் மேம்பாடு (Personality Development) மற்றும் தகவல் தொடர்புத் திறன் (Communication Skills) போன்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியராகப் பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது, மாதவனிடம் மாணவியாகப் பயின்றவர் தான் சரிதா பிர்ஜே. பொதுவாகத் திரைத்துறையினர் பார்ட்டிகள் அல்லது படப்பிடிப்புத் தளங்களில் சந்தித்துக் கொள்வதைப் போலன்றி, தாங்கள் ஒரு வகுப்பறையில்தான் முதன்முதலில் சந்தித்துக் கொண்டதாக மாதவன் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியராக இருந்த அவருக்கும், மாணவியாக இருந்த சரிதாவுக்கும் இடையே உருவான அந்தப் பழக்கம் பின்னாளில் காதலாக மலர்ந்து, திருமணத்தில் முடிந்தது. மாதவனின் நிஜ வாழ்க்கைக் காதல் கதையை அறிந்த அவரது ரசிகர்கள் தற்போது அதனைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
