“கார்த்தி அண்ணா நீங்க இப்படி இருக்குறது ரொம்ப தப்பு”… பருத்திவீரன் விவகாரத்தில் ஹீரோவுக்கு அறிவுரை சொன்ன குட்டி சாக்கு..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் கார்த்திக். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் கார்த்திக்கின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்த படம் பருத்திவீரன். இயக்குனர் அமீர் சுல்தான் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன்.

 

   

இந்த படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் குட்டி சாக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் விமல்ராஜ். இந்த படத்திற்கு பின்னர் இவர் வேறு எந்த படங்களில் நடிக்கவில்லை. சமீபகாலமாக இணையத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருப்பது அமீர் மற்றும் ஞானவேல் இடையே நடக்கும் பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சனை தான் . பல வருடங்களாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சனையில் தலையிட்டு அமீருக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இத்திரைப்படத்தில் குட்டி சாக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் விமல்ராஜ் கூறியுள்ளதாவது, ‘திரு ஞானவேல் அவர்கள் பேசிய காணொலியை பார்க்க நேர்ந்தது. தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த என்னை அழைத்து நடிப்பு சொல்லி கொடுத்து எனக்கு வாய்ப்புக் கொடுத்த அமீர் மாமா மீது இப்படியான பழிகளை சுமத்தியது மிகவும் வேதனையை ஏற்படுத்தியது.

படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு போனவர் நீங்கள். அதன் பிறகு அங்கு நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த நபர் என்ற முறையில் நான் நன்கு அறிவேன். படம் ஆரம்பத்தில் இருந்த மகிழ்ச்சியான அமீர் மாமா அதன் பிறகு அவருக்கு அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அதை அனைத்தையும் படப்பிடிப்புத் தளத்தில் அருகில் இருந்து பார்த்தவன் நான். எனவே ஞானவேல் அவர்கள் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்க வேண்டும். எனக்கும் கார்த்தி அண்ணாவுக்கும் அதுதான் முதல் படம். அவரும் அந்த சூழலை நன்கு அறிவார், தற்போது அவர் அமைதி காப்பது மிகவும் தவறான செயல்.

“ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார்”

என குறிப்பிட்டு நடிகர் கார்த்தி அவர்களுக்கு திருக்குறள் கூறி  அறிவுரை கூறியுள்ளார். இதோ அவரின் பதிவு…