Categories: சினிமா

எந்த வேடம் கொடுத்தாலும் கலக்குவேன்… வில்லன் to ஹீரோவாக ஜொலித்த கரண்… இப்ப என்ன ஆனார்?

Spread the love

தமிழ் சினிமாவில், குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு இடத்தில் இருந்தவர் நடிகர் கரண். குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப் படங்களில் நடித்தவர். தமிழில் தியாகராஜன் நடித்த தீச்சட்டி கோவிந்தன் தமிழில் இவரது முதல் படம். அந்த படத்தில் அவர் உதவியாளராக தோன்றினார். பின்னர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தில் சரத்பாபுவின் மகனாக நடித்தார். அதன் பின்னர் அவர் கமல்ஹாசனோடு நடித்த நம்மவர் திரைப்படம்தான் அவரை பிரபலம் ஆக்கியது.

நம்மவர் படத்தில், கமலை எதிர்க்கும் ஒரு வில்லன் கேரக்டரில் நடிக்க கமல், கரணுக்கு வாய்ப்பளித்தார். நம்மவர் படத்தை தொடர்ந்து ராமன் அப்துல்லா, கண்ணெதிரே தோன்றினாள் என 90 களிலும் 2000களின் தொடக்கத்திலும் பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் வேடத்திலும் நடித்து வந்தார். நம்மவர், காதல் கோட்டை, கண்ணாத்தாள், காதல் மன்னன் என பல படங்கள் அவருக்கு அடையாளத்தைப் பெற்றுத் தந்தன.

2006 ஆம் ஆண்டு வெளியான கொக்க்கி மற்றும் கருப்பசாமி குத்தகைதாரர்  ஆகிய இரு படங்களும் அவரை ஹீரோவாக்கின. கருப்பசாமி குத்தைகதாரர் திரைப்படம் வெற்றி பெற தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை.

அதனால் அவர் திரும்ப வில்லன் வேடத்திலும் நடிக்கவிரும்பாமல் சினிமாவை விட்டு விலகிவிட்டார். சில ஆண்டுகளாக அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. இதுபற்றி சமீபத்தில் வெளியான தகவலின் படி கரண் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறாராம்.

தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருவேன் என்று உறுதியளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இடையில் கரணின் வில்லத்தனமான நடிப்புகள் அடங்கிய காட்சித் துணுக்குகள் இணையத்தில் வைரலாகி அவருக்கென்றே ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

“நெஞ்சே நடுங்கிடுச்சு.. ஒன்றல்ல, இரண்டல்ல.. அடுத்தடுத்து வந்த நாகப்பாம்பு.. தெறித்து ஓடிய விவசாயி.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!

ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…

6 minutes ago

“காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லையா..?” அரசு மருத்துவமனையில் போலீஸ் அதிகாரியை பளார் என அறைந்த போதை வாலிபர்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…

10 minutes ago

வரலாற்று சாதனை: தமிழகச் சட்டமன்றத்தின் முதல் பெண் செயலாளராக சாந்தி நியமனம்..! யார் இவர்..? இவருடைய பவர் என்ன..?

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…

20 minutes ago

யாரைக் காப்பாற்ற இந்த சதி..? மின்துறை 18 ஹார்ட் டிஸ்க்குகள்.. மாயமான விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் இபிஎஸ்..!

மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…

23 minutes ago

₹840-க்கு சொல்லிவிட்டு ₹640-க்கு ஊழியர் செய்த ‘அந்த’ காரியம்.. செல்போன் பேசிய வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பெட்ரோல் பங்கில் அரங்கேறிய நூதன மோசடி..!!

ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…

24 minutes ago

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

38 minutes ago