Categories: சினிமா

வாடகை வீட்டில், மருத்துவ செலவுக்கு கூட வழியின்றி வாழ்ந்து மறைந்த நடிகர் ஜூனியர் பாலையா – பழம்பெரும் நடிகர் மகனுக்கே இப்படி ஒரு அவலமா?

Spread the love

நடிகர் ஜூனியர் பாலையா, பழம்பெரும் நடிகர் டிஎஸ் பாலையாவின் மூன்றாவது மகன். ரகு என்பது இவரது சொந்த பெயர். தந்தை பாலையா போலவே இருந்நதால், ஜூனியர் பாலையா என சினிமாவில் அழைக்கப்பட்டு, அதுவே நிரந்தரமாகி விட்டது. தந்தை டிஎஸ் பாலையா காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மிகச்சிறந்த குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக பெயர் பெற்றவர்.கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், ராசுக்குட்டி, சுந்தரகாண்டம், வேட்டிய மடிச்சுக்கட்டு, சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த ஜூனியர் பாலையா, சில மாதங்களுக்கு முன், கட்டிலில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு இருக்கிறார். 70 வயதான நிலையில், வளர்ந்த மகன், மகள், மனைவி உள்ள நிலையில், வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில்தான் வாழ்ந்திருக்கின்றனர். உடல் நலமின்றி, படங்களில் நடிக்க வாய்ப்புமின்றி, மருத்துவ செலவுக்கு கூட வழியின்றி தவித்திருக்கிறார் ஜூனியர் பாலையா.நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், ஜூனியர் பாலையா உயிர் பிரிந்திருக்கிறது. பாடகர் எஸ்என் சுரேந்தர், நடிகர்கள் செம்புலி ஜெகன், கோவை சரளா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். டிஎஸ் பாலையா என்ற புகழ் பெற்ற பழம்பெரும் நடிகரின் மகன், சாட்டை போன்ற பல நல்ல படங்களில் நடித்த ஜூனியர் பாலையா, சொந்த வீடு கூட இல்லாமல், மருத்துவ செலவுக்கு கூட வழியின்றி கடைசி காலத்தில், முதுமையில் வாடகை வீட்டில் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கம் போன்றவை இருந்தும், அந்த அமைப்பால், அதன் நிர்வாகிகளால் இந்த சிறந்த நடிகரை காப்பாற்றவோ, உதவவோ எந்த முயற்சியும் செய்யவில்லை. உதவுவும் முன்வரவில்லை என்பதுதான் கொடுமை.

admin

Recent Posts

டாக்டர்… என் குழந்தைக்கு 10 நாளா இருமல்… கொஞ்சம் பாருங்க… அடுத்த வாரம் வாங்க… நியூசிலாந்தில் கதறிய இந்தியத் தாய்… இணையத்தில் வைரல் வீடியோ…!

நியூசிலாந்தில் வசித்து வரும் ஆகிருதி ஜெய்ஸ்வால் ஸ்ரீவஸ்தவா என்ற இந்தியப் பெண், தனது குழந்தை கெவித் 10 நாட்களாகத் தொடர்ந்து…

13 minutes ago

கடவுளே… நூலிழையில் தப்பிய உயிர்… சாலையில் நடந்த கொடூர விபத்து… உறைந்துபோன வாகன ஓட்டிகள்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

ஹென்னூர்-பாகலூர் சாலையில் தேங்கியுள்ள மணல் மற்றும் சேறு காரணமாக புதன்கிழமை அன்று தனது மகளின் இருசக்கர வாகனம் சறுக்கி விழுந்ததைத்…

17 minutes ago

காப்பாத்துங்க… காப்பாத்துங்க… கங்கையில் மூழ்கிய இரு மகள்கள்… காப்பாற்றக் குதித்து சிக்கிய தந்தை… ஒரே பாய்ச்சலில் 3 உயிர்களை மீட்டு… மரணத்தை வென்ற ஹீரோ… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

உத்தரப் பிரதேசத்தில் கங்கையாற்றின் கரையில் வழக்கம்போல் அமைதியாகத் தொடங்கிய ஒரு நாள், கணப்பொழுதில் பேரதிர்ச்சியாக மாறியது. ஆற்றில் இறங்கி குளித்துக்…

25 minutes ago

ஐயோ பாவம்… நடுராத்திரியில் விவசாயி கொடூரமாகக் கொலை… காவல் நிலையத்தில் மனைவி… சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை… கிராமத்தில் திக் திக் சம்பவம்…!

யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சௌதுப்பால் மண்டலம், பந்தங்கி கிராமத்தைச் சேர்ந்த ரபோலு தனய்யா என்ற விவசாயி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…

32 minutes ago

திக் திக்… கணவரின் வயிற்றை பிளந்து… குடலை எடுத்து பையில் அடைத்த கொடூர மனைவி… அரியானாவில் நடுங்க வைக்கும் சம்பவம்…!

அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவனை மனைவியே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்தப்…

42 minutes ago