முன்னணி நடிகரான ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சைரன் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் இருந்தும் ஜெயம் ரவி விலகிவிட்டார். இந்த நிலையில் அடுத்தடுத்து ஜெயம்ரவி கைவசம் இருக்கும் படங்கள் குறித்து பார்ப்போம்.
)
முதலாவதாக சிவா மனசுல சக்தி புகழ் எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அவருக்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். பிரதர் திரைப்படம் காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜீனி திரைப்படம் உருவாகிறது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.

கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி உள்ளிட்ட ஏராளமானார் இந்த படத்தில் நடிக்கின்றனர். அந்த படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. மேலும் படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் ஆகும். இதனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் ஜீனி படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். காதல் ரொமான்ஸ் கலந்து இந்த படம் எடுக்கப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றார். அடுத்ததாக மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவனவெளியானது.படத்தின் அப்டேட் ஏற்கனவே வெளியானது.

ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு கொஞ்சம் தாமதமாக தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஜெயம் ரவி கமிட் ஆகியுள்ளார். இந்த படம் குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாம்.

