Connect with us

CINEMA

தனி ஒருவன் 2 படத்தில் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் நயன்தாரா… வில்லன் நடிகர் இவரா?… அப்போ படம் வேற லெவலில் இருக்கப் போகுது…!!

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் தனி ஒருவன். இந்த திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை முன்னிட்டு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இன் கல்பாத்தி தங்களின் 26 ஆவது திரைப்படமான தனி ஒருவன் 2 திரைப்படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

   

இயக்குனர் மோகன் ராஜாவும் நடிகர் ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக தனி ஒருவன் 2. இந்த படத்திற்காக ஜெயம் ரவியுடன் நயன்தாரா மீண்டும் இணைகின்றார். சர்வதேச தரத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளதாகவும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுக்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தனி ஒருவன் முதல் பாகத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் அரவிந்தசாமி நடித்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தில் ஜெயம் ரவியை தேடி வரும் அந்த வில்லனாக பகத் பாசில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top