Categories: சினிமா

கருடன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இவர் பிரபல நடிகரின் மகனா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

Spread the love

பிரபல தயாரிப்பாளரும், குணச்சித்திர நடிகருமான ஜெயப்ரகாஷின் மகன்தான் கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த துஷ்யந்த் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல குணச்சித்திர நடிகர். நடிகைகள் பிரபலமான நடிகர்கள் அளவிற்கு பாராட்டப் படுவார்கள். அப்படி பாராட்டப்பட்ட நடிகர் தான் ஜெயபிரகாஷ். முதலில் தயாரிப்பாளராக தனது திரைப்படத்தை தொடங்கிய இவர் அதன் பின்னர் நடிகராக அறிமுகமானார். செல்லமே, ஏப்ரல் மாதத்தில், தவசி போன்ற திரைப்படங்களை தயாரித்தவர் ஜெயபிரகாஷ்.

பிரபல தயாரிப்பாளராக இருந்து வந்த இவர் சேரனின் மாயக்கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்தாலும், இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த திரைப்படம் பசங்க தான். அந்த திரைப்படத்தில் பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதைத்தொடர்ந்து நாடோடிகள், நான் மகான் அல்ல, ரௌத்திரம், எதிர்நீச்சல், தனி ஒருவன், தங்க மகன், கதகளி, பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கின்றார். மங்காத்தா திரைப்படத்தில் திரிஷாவின் அப்பாவாக நடித்திருந்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் ஹீரோவாக மிகச்சிறந்த கணவராக நடித்த அசத்தியிருந்தார்.

இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் .இதில் மூத்த மகன் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடிகராக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார், ஈசன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து ஐவராட்டம் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது சூரி நடிப்பில் வெளியாகி சக்க போடு போட்டு வரும் கருடன் திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கின்றார். இதை கேள்விப்பட்ட பலரும் அவரின் மகனா இவர் என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

ஐயோ காப்பாத்துங்க… புல் வெட்டப் போன இடத்தில்… கதவு திறக்கப்பட்டு புலி கடித்ததில் பெண் பலி… ஜைப்பூரில் கொடூர சம்பவம்…!

ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால்…

3 minutes ago

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

31 minutes ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

39 minutes ago

“தடம்புரண்ட பைக்… பின்னாலேயே மோதிய கார்…” வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பலி…. பெரும் சோகம்…!!

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…

41 minutes ago

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

47 minutes ago