தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான பாலா இயக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் வணங்கான். இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வணங்கான் படத்திலிருந்து அவர் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமான நிலையில் படத்தின் சூட்டிங் தொடங்கியது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் பாடல்களை உருவாக்கிய நிலையில் பின்னணி இசையில் சாங் சி.எஸ் அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார்.
இவருடைய பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்தவும் ரசிகர்களை படத்தோடு ஒன்று செய்யவும் காரணமாக அமைந்துள்ளது. படத்தில் அருண் விஜயோடு ரிதா மற்றும் ரோஷினி பிரகாஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாலாவையும் அருண் விஜயையும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அருண் விஜய் திரை வாழ்க்கையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
இதற்கு முன்னர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த போது அஜித் ரசிகர்கள் அருண் விஜயின் நடிப்பை கொண்டாடிய நிலையில் தற்போது தான் மீண்டும் கொண்டாடி வருகின்றனர். இப்படியான நிலையில் வணங்கான் திரைப்படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் இரண்டு கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதால் படத்தின் வசூல் இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…