விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
இந்த சீசனில் விடிவி கணேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம், சுஜிதா, பிரியங்கா, சின்னத்திரை நடிகர் அக்ஷய் கமல் யூடியூப்பர் இர்பான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். இதற்கு போட்டியாக சன் டிவியிலும் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. குக் வித் கோமாளி நான்கு சீசன்களிலும் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் சன்டிவியில் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார்.
இதனால் இதை இரு இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான அக்ஷய் கமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரியலில் நடித்தார். இவர் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பின்னர் இந்திரா என்ற சீரியலிலும் தற்போது நடித்து வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் அக்ஷய் சீரியலில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக வேறு நடிகரை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி 3 மாதங்கள் மட்டும்தான் நடக்கும். அதற்காக சின்னத்திரை நடிகர் சீரியலில் இருந்து விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.