இன்று 100 கோடி சம்பளம் வாங்கும் அஜித்.. பிரபல நடிகைக்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தது உங்களுக்கு தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி இன்று தனக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் பிறகு இவருடைய படம் எதுவும் வெளியாகவில்லை. சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விடாமுயற்சி.

இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறவில்லை. இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி இருந்த நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் அடிவாங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி என்ற திரைப்படத்திலும் திரிஷா இவருக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் இந்தத் திரைப்படம் வருகின்ற மே மாதம் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் தற்போது 100 கோடிக்கு மேல் ஒரு படத்தில் நடிக்க அஜித் சம்பளம் வாங்கி வரும் நிலையில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடிகைக்காக ஒரு படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். அதாவது அஜித் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த திரைப்படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். ஸ்ரீதேவி கதையின் நாயகியாக நடித்திருந்த இந்த திரைப்படத்தில் அஜித் கேமியா ரோலில் நடித்திருந்தார். அந்த சிறிய ரோலில் நடிப்பதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம்.

நடிகை ஸ்ரீதேவி மீது உள்ள மதிப்பு மற்றும் மரியாதையின் காரணமாக அஜீத் அந்த படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம் ஸ்ரீதேவியின் குடும்பத்துடன் அஜித் ஒரு உறவையும் வளர்த்துக் கொண்டார். பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் அஜித் முக்கிய வேடத்தில் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதே சமயம் தொடர்ந்து அஜித்துடன் மூன்று படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

6 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

6 மணத்தியாலங்கள் ago