நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜயை தொடர்ந்து அடுத்து அஜீத் இருக்கிறார். அவர் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு, கடந்த 3 மாதங்களாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அங்கு கடுமையான பனிப்பொழிவு, குளிர், மணல் புயல், சூறாவளி காரணமாக, கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் நடப்பது தடைபட்டுள்ளது. விடாமுயற்சி படக்குழுவினர் தற்போது சென்னையில் உள்ளனர். அஜீத்குமார் சென்னை திரும்பாமல், துபாயில் உள்ள அவரது வீட்டில், குடும்பத்துடன் இருந்து வருகிறார். வரும் 7ம் தேதிக்கு பிறகு மீண்டும் அஜர்பைஜானில் ஷூட்டிங் நடத்த படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 28ம் தேதி நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் 29ம் தேதி மாலை, கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த துக்க நிகழ்வில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சத்யராஜ், குஷ்பு, வைரமுத்து, டி ராஜேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். நடிகர் வடிவேலு வராதது கடுமையான விமர்சனத்தை அவர் மீது ஏற்படுத்தியுள்ளது. அதே போல் வெளிநாடுகளில் இருந்ததால் தனுஷ், சூர்யா, கார்த்தி, சிம்பு போன்றவர்களும் கேப்டனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
ஆனால் இதில் நடிகர் அஜீத்குமார் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகாந்த். அவரது மறைவுக்கு நேரில் வராவிட்டாலும், ஒரு இரங்கல் அறிக்கையாவது அஜீத் வெளியிட்டு இருக்கலாம் என்று சினிமாத்துறை சார்ந்தவர்களும், சினிமா ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, நடிகர் அஜீத்குமார்,
அஜர்பைஜானில் நடந்த ஷூட்டிங்கில் ஒரு சண்டை காட்சியில் பங்கேற்றார். அவருக்காக டூப் போட்டு நடிக்க 2 டூப் நடிகர்கள் இருந்தும், அந்த ரிஸ்க் ஆன காட்சியில் அவரே நடித்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால், துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, 3 நாட்கள் சிகிச்சை பெற்றார். அதனால்தான் அவரால் சென்னைக்கு நேரில் வந்து விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.
லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகனாக நடித்திருந்த மேத்யூ தாமஸ் குடும்பம் விபத்தில் சிக்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.…
பிரபல சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சக்திவேல் சீரியலில் நடித்து வரும் நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மத்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில்…
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…