Categories: சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் காயம்பட்ட அஜீத்குமார் மருத்துவமனையில் அட்மிட் – கேப்டன் மறைவுக்கு நேரில் வராததற்கு அதுதான் காரணமா?

Spread the love

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜயை தொடர்ந்து அடுத்து அஜீத் இருக்கிறார். அவர் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு, கடந்த 3 மாதங்களாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அங்கு கடுமையான பனிப்பொழிவு, குளிர், மணல் புயல், சூறாவளி காரணமாக, கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் நடப்பது தடைபட்டுள்ளது. விடாமுயற்சி படக்குழுவினர் தற்போது சென்னையில் உள்ளனர். அஜீத்குமார் சென்னை திரும்பாமல், துபாயில் உள்ள அவரது வீட்டில், குடும்பத்துடன் இருந்து வருகிறார். வரும் 7ம் தேதிக்கு பிறகு மீண்டும் அஜர்பைஜானில் ஷூட்டிங் நடத்த படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 28ம் தேதி நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் 29ம் தேதி மாலை, கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த துக்க நிகழ்வில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சத்யராஜ், குஷ்பு, வைரமுத்து, டி ராஜேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். நடிகர் வடிவேலு வராதது கடுமையான விமர்சனத்தை அவர் மீது ஏற்படுத்தியுள்ளது. அதே போல் வெளிநாடுகளில் இருந்ததால் தனுஷ், சூர்யா, கார்த்தி, சிம்பு போன்றவர்களும் கேப்டனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

ஆனால் இதில் நடிகர் அஜீத்குமார் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகாந்த். அவரது மறைவுக்கு நேரில் வராவிட்டாலும், ஒரு இரங்கல் அறிக்கையாவது அஜீத் வெளியிட்டு இருக்கலாம் என்று சினிமாத்துறை சார்ந்தவர்களும், சினிமா ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, நடிகர் அஜீத்குமார்,

அஜர்பைஜானில் நடந்த ஷூட்டிங்கில் ஒரு சண்டை காட்சியில் பங்கேற்றார். அவருக்காக டூப் போட்டு நடிக்க 2 டூப் நடிகர்கள் இருந்தும், அந்த ரிஸ்க் ஆன காட்சியில் அவரே நடித்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால், துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, 3 நாட்கள் சிகிச்சை பெற்றார். அதனால்தான் அவரால் சென்னைக்கு நேரில் வந்து விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

admin

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

3 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

3 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

3 மணத்தியாலங்கள் ago