தமிழ் கடவுளாக போற்றப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் ஆயுதமாக இருப்பது தான் வேல். வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை என்று கூறுவார்கள். அதற்கு ஏற்ப அரக்கர்களை அழித்து நன்மைகளை அருளியது முருகனின் வேல். வேல் முருகனின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. கோவில்களில் வேல் வழிபாடு செய்வது உண்டு. ஆனால் சமீப காலமாக அனைவர் வீட்டிலும் வேல் வாங்கி வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். ஆனால் இந்த வேலை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா அப்படி செய்வதென்றால் வேலை வைத்து பூஜை செய்யும் முறை என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

வேல் வழிபாடு செய்வதற்கு முதலில் வேல் வாங்க வேண்டும். அதையும் குறிப்பிட்ட நேரத்தில் தான் வாங்க வேண்டும். கிருத்திகை, பரணி, பூசம், விசாகம், சித்திரை, புனர்பூசம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் நிகழும் நேரத்திலும் சஷ்டி, பஞ்சமி, தசமி, அஷ்டமி, அமாவாசை ஆசிய திதிகள் நிகழும் நேரத்தில் வாங்க வேண்டும். வேல் வாங்கும் போது வெள்ளி, செம்பு, தங்கம், பஞ்சலோகம் ஆகியவற்றால் செய்யப்பட்ட வேலை வாங்கிக் கொள்ளுங்கள்.
வேல் வாங்கி வீட்டிற்கு வந்த பிறகு பால் பன்னீர் மஞ்சள் நீர் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். வேலை விபூதியில் ஒரு மணி நேரம் போட்டு வைக்க வேண்டும். அதற்கு பிறகு சாமி கையில் வைத்து எடுத்துவிட்டு ஒரு செம்பில் நெல்லிலோ அல்லது விபூதிலோ அதை நிற்க வைத்து வழிபாட்டை தொடங்க வேண்டும்.

இந்த வேல் வழிபாட்டை வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை அல்லது கார்த்திகை, சஷ்டி ஆகிய தினங்களிலும் வேல் வழிபாடு செய்தால் நல்ல பலன்களை பெற முடியும். வேலை பூஜை செய்யும் போது வேலை அபிஷேகம் செய்து அதற்கு பூ போட்டு வைத்து வேல்மாறல் வேல் பதிகம் முருகன் பாடல்கள் கந்தன் அஸ்டோதகம் ஆகியவற்றை படித்து மனமுருகி வேண்டிக்கொண்டால் நாம் நினைத்ததை நடத்திக்காட்டி அருள்வார் முருகப்பெருமான்.
