Categories: சினிமா

ரஜினி கதாபாத்திரத்தில் நான் எப்படி நடிக்க முடியும்?.. ரஜினியே சொல்லியும் மறுத்த அமீர்கான்.. எந்த படத்தில் தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் சில ஷாட்களில் நடித்திருப்பது ரஜினியே இல்லை என்றும் டூப் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த கிள்ம்ப்ஸ் வீடியோவின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், அதில் ரஜினிகாந்த் நடித்துள்ளதை உறுதி செய்தது.

ரஜினிகாந்த் நடிப்பில் அவரின் சினிமா வாழ்க்கையில் உச்சம் தொட்ட படம் என்றால் அது 2.0 படம்தான். அந்த படம் அவர் நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம். அந்த சமயத்தில் ரஜினிகாந்தின் உடல்நிலை சரியில்லாததால் அவரே இயக்குனர் ஷங்கரிடம் ‘இந்த படத்தில் அமீர்கான் நடித்தால் நன்றாக இருக்கும். அதனால் அவரை வைத்து படமாக எடுங்கள்” என்று கூற ஷங்கர் அமீர்கானை வைத்து இயக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அமீர்கானோ, “நான் கண்ணை மூடி அந்த கதாபாத்திரம் பற்றி யோசித்தாலே ரஜினிகாந்த்தான் கண் முன் வருகிறார். அதனால் என்னால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே முடியாது.” என சொல்லிவிட்டாராம். அதன்பின்னர்தான் ஷங்கர், மீண்டும் ரஜினியையே வைத்து இயக்கினார்.

vinoth

Recent Posts

“கல்யாணம் பண்ணிக்கிறேன்”…. ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆண் காவலர்… கதறிய பெண் போலீஸ்… சென்னையில் பரபரப்பு….!

சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…

9 minutes ago

“ஐயோ கடவுளே இப்படியா ஆகணும்…?” தோட்டத்தில் வேலை பார்த்த 16 வயது சிறுவன்…” நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரது தோட்டத்தில், 16 வயதே ஆன மனோஜ் என்ற சிறுவன் வேலை…

14 minutes ago

திமுக முன்னாள் அமைச்சருக்கு ஸ்கெட்ச்?… மாட்டிய அன்பில் மகேஸ்…. சிக்கிய 49 வங்கி கணக்குகள்… காவல் துறை வெளியிட்ட பகீர் தகவல்….!

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்…

14 minutes ago

அடித்து ஆடும் முதல்வர் விஜய்…. “இதுதான் அந்த 2வது ஃபைலா?” அப்போ கேஎன் நேரு.. இப்போ அன்பில் மகேஷ்….. அடுத்தடுத்து அதிரும் அரசியல் களம்….!

திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை 7 மணி முதல்…

19 minutes ago

“சினிமா பாணியில் ருத்திரதாண்டவம்…” கையில் கோடரியுடன் கலெக்டர் ஆபீசுக்கு வந்த நபர்… பதறிய அதிகாரிகள்…. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள், ஒல்லியான தோற்றம் கொண்ட நபர்…

24 minutes ago

ரூ. 100 கோடி லஞ்சப் புகார்…. தனியார் பள்ளி அனுமதி வழக்கில் சிக்கும் அன்பில் மகேஷ்?… கோபத்தின் உச்சிக்கே சென்ற ஸ்டாலின்…. பரபரக்கும் அரசியல் களம்….!

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று…

25 minutes ago