உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் தனது காதலியைச் சந்திப்பதற்காக அவரது கிராமத்திற்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகப் பெண்ணின் உறவினர்களிடம் அந்த வாலிபர் கையும் களவுமாகச் சிக்கிக்கொண்டார்.
ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார் மற்றும் உறவினர்கள், அந்த வாலிபரைக் கயிறுகளால் இறுகக் கட்டிவைத்து மிருகத்தனமாகத் தாக்கிச் சித்திரவதை செய்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல், அந்த வாலிபரைப் பிணைக்கைதியாகப் பிடித்துவைத்துக்கொண்டு, அவரை உயிருடன் விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டிப் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டிவைக்கப்பட்ட நிலையில் அந்த வாலிபர் சித்திரவதைக்குள்ளாகும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகிப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலக் காவல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, வாலிபரை மீட்டு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ என்பவரும், குரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதில் குரியா…
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், அக்கட்சியிலிருந்து விலகித் தனது…
தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள துங் சோங் ஹோங் பகுதியில் வீட்டின் வெளியே சிமெண்டால் கட்டப்பட்ட மீன் தொட்டியில்…
காஞ்சிபுரம் அருகே உள்ள வண்ணான்தாங்கல் பகுதியைச் சேர்ந்த விறகு வியாபாரி ஆறுமுகம் என்பவரிடம், சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த ஆனந்தன்…
கேரள மாநிலத்தில் செல்போன் மற்றும் இணையதளங்கள் வாயிலாக இயங்கி வந்த ஆபாச வீடியோ விற்பனை சாம்ராஜ்ஜியத்தை அதிரடியாகக் கண்டுபிடித்து போலிஸார்…
உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கார் மாவட்டம் பூல்பூர் போலிஸ் எல்லைக்குட்பட்ட கான் ஜகான்பூர் பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவருக்குச் சூரஜ்…