“முகத்தில் ஆசிட் வீசுவேன்…” பலமுறை பலாத்காரம் செய்த திருமணமான வாலிபர்…! ஆசையாக காதலித்த இளம்பெண்ணுக்கு ஷாக்… போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on ஐப்பசி 17, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் பகுதியில் சேர்ந்த 22 வயது இளம்பெண் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கு பெருவிளை பகுதியைச் சேர்ந்த பார்த்திபா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த வாலிபரும் இளம்பெண்ணும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அடிக்கடி பார்த்திபா மாணவியின் வீட்டிற்கும், சென்னையில் அவர் தங்கியிருக்கும் அறைக்கும் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மாணவியை ஏமாற்றி 6.5 பவுன் தங்கநகை, 7 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு ஏமாற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து கேட்டபோது இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிடுவேன். முகத்தில் ஆசிட் வீசுவென் என மிரட்டியுள்ளார். இதற்கிடையே பார்த்திபாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் கேட்டு அதிர்ந்து போன மாணவி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.