பெங்களூருவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் சுபம் சுக்லா, தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருப்பதை மறைத்து, நெலமங்களாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணை மும்பைக்கு வேலைக்குச் செல்வதாகத் தனது குடும்பத்தாரிடம் பொய் சொல்ல வைத்து, பெங்களூருவில் அவருடன் மூன்று ஆண்டுகள் ‘லிவ்-இன்’ முறையில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்தக் காலகட்டத்தில், பல்வேறு காரணங்களைக் கூறி அந்தப் பெண்ணிடமிருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 200 கிராம் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டதோடு, அவரது மைனர் தங்கைக்கும் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளார்.
சுபம் சுக்லாவிற்கு ஏற்கனவே குடும்பம் இருப்பதை அறிந்த அந்தப் பெண் இது குறித்துக் கேட்டபோது, மனைவியை விவாகரத்து செய்துவிடுவதாகக் கூறி மீண்டும் நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். ஒருகட்டத்தில் அவனது உண்மையான முகம் தெரிந்ததும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாகலகுண்டே போலீசார் சுபம் சுக்லாவை அதிரடியாகக் கைது செய்தனர்.
நகை, பணத்தைப் பறித்துக்கொண்டு ஒரு குடும்பத்தின் இரண்டு பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த இந்த இளைஞரின் செயல் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…