“எங்க ஊர்ல நாங்க தான் டா கெத்து”… முகம் சிதைத்து கொல்லப்பட்ட இளைஞர்… சிவகாசியை உலுக்கிய கொலைச் சம்பவம்….!

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்விரோதம் மற்றும் போதைப்பொருள் கிடைக்காத ஆத்திரத்தில் வாலிபர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அண்ணா காலனி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்தையா என்ற முரளி (29), கட்டிட உட்புற அலங்கார வேலை செய்து வந்தார். நேற்று பணி முடிந்து வீட்டின் அருகே மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த செல்வம் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர் முரளியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தப்பியோடினர். மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் முரளியின் முகம் மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த சிவகாசி நகர் போலீசார், முரளியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த முரளிக்கும் அண்ணா காலனியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக, பராசக்தி காலனியைச் சேர்ந்த சரவணப்பிரபு என்பவருடன் செல்வம் என்பவருக்கு ஏற்பட்ட மோதலில், முரளி சரவணப்பிரபுவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு செல்வத்தைக் கண்டித்துள்ளார். இது செல்வத்திற்கு முரளி மீது கடும் வன்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட செல்வம் (26) மற்றும் மணிகண்டன் (25) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவர்கள் இருவரும், சம்பவத்தன்று கஞ்சா வாங்குவதற்காக வழக்கமான இடத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு கஞ்சா கிடைக்காததால் கடும் விரக்தியில் இருந்த அவர்கள், அந்த ஆத்திரத்தை ஏற்கனவே முன்விரோதம் இருந்த முரளி மீது காட்டியுள்ளனர். மது அருந்திக் கொண்டிருந்த முரளியிடம் மீண்டும் தகராறு செய்து, ஆத்திரத்தில் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் அவரைத் தாக்கியதை ஒப்புக்கொண்டனர்.

முன்பகை மற்றும் போதை கிடைக்காத விரக்தியில் அரங்கேறிய இந்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட இருவரையும் சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் இளைஞர்கள் தடம் மாறி இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

1 minute ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

3 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

3 minutes ago

“கொலை செய்துவிட்டேன்” பிணத்தின் அருகே அமர்ந்து கதறல்… காம வெறிக்கு பலியான பாசம்..? ஹோட்டலில் மாமாவை துடிக்க துடிக்க சிதைத்த இளம்பெண்..!!!

ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…

6 minutes ago

“முந்திரி தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட பெண்”… உல்லாசமாக இருந்த காதலன் செய்த கொடூரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…

13 minutes ago

ஷாக்கிங் வீடியோ: மகளுக்குப் பக்கத்தில் காதலன்.. ஆத்திரத்தில் கத்தியை உருவிய தந்தை! நடுநடுங்க வைத்த ஆணவத் தாக்குதல் முயற்சி..!!

கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…

13 minutes ago