கள்ளக்காதலுக்கு இடையூறு… 22 வயது மகள் மற்றும் கணவரை கொன்ற கொடூரம்…. வெளியான திடுக்கிடும் சம்பவம்..!

Spread the love

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி(58) இவர் கவிதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு வர்ஷினி ஹன்சிகா என இரு மகள்கள் உள்ளனர். ஹன்சிகாவுக்கு திருமணம் ஆகி வெளியூரில் அவர் கணவருடன் வசித்து வருகிறார். மூத்த மகள் வர்ஷினி தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் , கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குமாரசாமிக்கு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கினார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் கவிதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விஷயம் குமாரசாமிக்கு தெரிய வர இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தன் கணவரை போட்டுத் தள்ள நினைத்த கவிதா கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி யாரும் இல்லாத பொழுது ராஜகுமாரை தனது வீட்டிற்கு வரவழைத்தார் பின் கவிதா தன் கணவரின் கால்களை பிடித்துக் கொண்டார் ராஜ்குமார் குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். தன் கணவர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக நாடகமாடி குமாரசாமி உடலை நல்லடக்கம் செய்தார்.

தனது தந்தை இறப்பு குறித்து தொடர்ந்து கேள்வி கேட்டுள்ள வர்ஷினியை ராஜ்குமாருடன் சேர்ந்து கடந்த மாதம் இரண்டாம் தேதி திட்டமிட்டு கொலை செய்தார். பின் மகளின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் வீசி சென்றார். மேலும் தனது மகள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் ராஜ்குமார் கடந்த மாதம் 25ஆம் தேதி வர்ஷினியின் உடலை எடுத்துக்கொண்டு தேசிய நெடுஞ்சாலை சென்றுள்ளார். அங்கே ஒரு ஓரமாக பிணத்தை வைத்து அதன் மீது மஞ்சள் குங்குமம் இட்டு பூக்களை தூவினார். மேலும் பல அணிகளை அடித்து அமானுஷ்ய சடங்கு நடப்பது போல சித்தரித்து வர்ஷினியின் உடல் அருகே அவர் ஆதார் கார்டை வீசி சென்றார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வர்ஷணியின் பிணத்தை கைப்பற்றி கவிதாக்கு தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கவிதா தனது மகளை யாரோ கொலை செய்து விட்டதாக கதறி அழுது நாடகம் ஆடினார். கவிதாவின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது மேலும் போலீசாரின் கிடக்குபிடி விசாரணையில் கவிதா தனது காதலனுடன் சேர்ந்து கணவனையும் மகளையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Divyamayakannan

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

5 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

5 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

5 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

6 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

6 மணத்தியாலங்கள் ago