உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில், 3 வயது சிறுவன் ஒருவன் தனது முன்ஜென்ம நினைவுகளைத் துல்லியமாகக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சிவகுமார் – ராம்பெட்டி தம்பதியின் மகனான ஜீதன், தனக்கு வேறு ஒரு பெற்றோரும் வீடும் இருப்பதாகக் கூறி அழுதுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அவன் குறிப்பிட்ட போலாப்பூர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த விதேசி என்பவரைத் தனது தந்தை என்றும், அவரது மனைவியைத் தாய் என்றும் கூறி கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.
விசாரணையில், விதேசியின் மகன் திலீப் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூருவில் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. திலீப் மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்தே ஜீதன் பிறந்துள்ளார். அந்த வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் ரகசிய இடங்களைச் சிறுவன் சரியாக அடையாளம் காட்டியதால், இது திலீப்பின் மறுபிறவிதான் என அந்த கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த விசித்திரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அந்தப் பகுதி முழுவதும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…