மறுபிறவி உண்மையா…? கடலில் மூழ்கி இறந்த மகன் மீண்டும் பிறந்தாரா…? மர்மம் விலகும் பகீர் பின்னணி…!!

By Devi Ramu on சித்திரை 19, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில், 3 வயது சிறுவன் ஒருவன் தனது முன்ஜென்ம நினைவுகளைத் துல்லியமாகக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சிவகுமார் – ராம்பெட்டி தம்பதியின் மகனான ஜீதன், தனக்கு வேறு ஒரு பெற்றோரும் வீடும் இருப்பதாகக் கூறி அழுதுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், அவன் குறிப்பிட்ட போலாப்பூர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த விதேசி என்பவரைத் தனது தந்தை என்றும், அவரது மனைவியைத் தாய் என்றும் கூறி கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.

விசாரணையில், விதேசியின் மகன் திலீப் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூருவில் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. திலீப் மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்தே ஜீதன் பிறந்துள்ளார். அந்த வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் ரகசிய இடங்களைச் சிறுவன் சரியாக அடையாளம் காட்டியதால், இது திலீப்பின் மறுபிறவிதான் என அந்த கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த விசித்திரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அந்தப் பகுதி முழுவதும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.