தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்தவர் அக்ஷய் ராஜ் ( 17 ). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் அதிக வீடியோக்களையும்,ரீல்ஸ்களையும் பதிவிட்டு வந்துள்ளார். அவர் ஓடும் ரெயில் அருகே நெருங்கி, நடந்து சென்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்று உள்ளார்.
ஆனால் வேகமாக சென்ற ரெயில் அவர் தலை மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரெயில்வே போலீஸ் ஒருவர் இதனை கவனித்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அகஷயை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . வேகமாக வரும் ரெயிலுக்கு மிக அருகில் அக்ஷய் வருவதும், அவர் மீது ரெயில் மோதுவதும் போன்ற இந்த வீடியோ தற்போது வேகமாக இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
#Why pic.twitter.com/xFuG0UN2h4
— Vishal Dharm (@VishalDharm1) September 4, 2022