மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியில் நிகழ்ந்த நெஞ்சை உருக்கும் சாலை விபத்தில், தந்தையாகப் போகும் மகிழ்ச்சியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ் , தனது மனைவியின் பிரசவத்திற்காக ராணுவத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்துள்ளார். தனது மனைவியின் பிரசவ நேரத்திற்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில், மருத்துவமனை அல்லது தேவையான பணிகளுக்காகச் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.
அவரது மனைவிக்குக் குழந்தை பிறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அந்த வீரர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தை பிறந்து 8 மணி நேரமே ஆன மகளுடன் ஸ்டெச்சரில் வந்த மனைவி கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டது காண்போரை கலங்கச்செய்தது. குழந்தையின் முகத்தைப் பார்க்கும் முன்பே தேசத்தைக் காத்த அந்த வீரர் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினரையும், கிராமத்தையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…