மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியில் நிகழ்ந்த நெஞ்சை உருக்கும் சாலை விபத்தில், தந்தையாகப் போகும் மகிழ்ச்சியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ் , தனது மனைவியின் பிரசவத்திற்காக ராணுவத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்துள்ளார். தனது மனைவியின் பிரசவ நேரத்திற்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில், மருத்துவமனை அல்லது தேவையான பணிகளுக்காகச் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார்.
அவரது மனைவிக்குக் குழந்தை பிறப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அந்த வீரர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தை பிறந்து 8 மணி நேரமே ஆன மகளுடன் ஸ்டெச்சரில் வந்த மனைவி கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டது காண்போரை கலங்கச்செய்தது. குழந்தையின் முகத்தைப் பார்க்கும் முன்பே தேசத்தைக் காத்த அந்த வீரர் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினரையும், கிராமத்தையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…
தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…