Categories: சினிமா

வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரிடம் ரூ. 25 லட்சம் ரூபாயை ஏமாற்றினாரா பிரபுதேவா சகோதரர் – உண்மையில் நடந்ததுதான் என்ன?

Spread the love

நடிகர், நடன இயக்குநர், இயக்குநராக இருப்பவர் பிரபுதேவா. இவரது தம்பி நாகேந்திர பிரசாத். இவரும் கில்லி, 123, தொட்டாச்சிணுங்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் நடன காட்சிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். இவருக்கு சொந்தமான அபார்ட்மென்ட் வீடு, தேனாம்பேட்டையில் உள்ளது. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த விக்னேஷ் என்பவர், நாகேந்திர பிரசாத் தன்னிடம் ரூ. 25 லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டதாகவும், வீட்டை பூட்டி சீல் வைத்து விட்டதாகவும் புகார் கூறும் வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விக்னேஷ் கூறியிருப்பதாவது, கொரோனா காலகட்டத்துக்கு பிறகு, தேனாம்பேட்டையில் வாடகைக்கு வீடு தேடிய போது, இந்த வீட்டின் முன் டூலெட் போர்டு இருந்தது. அந்த போர்டில் இருந்த நெம்பருக்கு பேசிய போது, வீட்டைக்கு வாடகைக்கு விட ரூ. 25 லட்சத்தை, வீடுகளை நிர்வகிக்கும் கம்பெனியிடம் தரவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

கம்பெனி எதற்கு என்று கேட்ட போது, அவர்களது பராமரிப்பில் விட்டால்தான், கூடுதல் லாபம் கிடைக்கும். ஆனால், வீட்டை காலி செய்யும் போது, நீங்கள் கொடுத்த ரூ. 25 லட்சம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அவர் கூறியதை நம்பி, ரூ. 25 லட்சம் அந்த கம்பெனியிடம் ஒப்படைத்தேன். அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளது. அந்த கம்பெனி பெங்களூருவில் உள்ளது என்றனர். மற்றபடி அந்த கம்பெனி குறித்த எந்த விவரமும் எனக்கு தெரியாது.

இந்நிலையில், எட்டு மாதங்கள் மட்டுமே அந்த கம்பெனி, உங்கள் வீட்டுக்கு வாடகை கொடுத்துள்ளது. அந்த கம்பெனி எஸ்கேப் ஆகிவிட்டது. அதனால், வீட்டை உடனடியாக காலி செய்யுங்கள் என, வீட்டு உரிமையாளர் நாகேந்திர பிரசாத் போனில் மிரட்டுகிறார். ஆனால், 2 ஆண்டுகள் நான் இந்த வீட்டில் இருக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நான் தந்த செக்யூரிட்டி ரூ 25 லட்சத்தை, கம்பெனியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்கின்றனர்.

இப்போது, போலீஸ் உதவியுடன் வீட்டை பூட்டி விட்டனர். வீட்டுக்குள் நாங்கள் வளர்க்கும் நாய் உள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர் நடிகர் பிரபுதேவா தம்பி நாகேந்திர பிரசாத் என்பதே எனக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. கம்பெனிகாரங்க ஓடி விட்டதாக, என் பணம் ரூ. 25 லட்சத்தை திருப்பித் தராமல் ஏமாற்ற பார்க்கின்றனர், என்று கூறி இருக்கிறார் விக்னேஷ். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago