தனது சொந்த ஊரில் இருக்கும் கோவிலில்… மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்… அழகான புகைப்படம்…

By Begam on ஐப்பசி 28, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ள இவர் முதன்முறையாக அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தார். நடிகர் அஜித்திற்கு தல என்ற பெயர் வர காரணமாகவும் இருந்தவர். இதுவரை தமிழில் இவர் எடுத்த அனைத்து படங்களுமே ஹிட் என்றே கூறலாம்.

   

அதனை தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இயக்குனராக மட்டும் இல்லாமல் எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளராகவும் சினிமாவில் பயணித்து வருகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரம்யா என்பவரை 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

   

 

பெரும்பாலும் பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து கொள்வது இல்லை. ஆனால் முருக தாஸ் சற்று வித்யாசமனவராக இருக்கிறார்.  இவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாளும் பெரும்பாலும் தனது மனைவி மற்றும் தனது பிள்ளைகளுடன் தான் செல்வாராம்.

மேலும் இவரது மனைவி ரம்யா மிகுந்த தெய்வ பக்தி கொண்டவராம். அதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில் குளம் என்று தான் சுற்றுவார்களாம். தற்பொழுது இவர் தனது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் உள்ள பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…