தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுகவின் முக்கிய அரசியல் நகர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை தொகுதி மாற்றி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி தன்னுடைய தாத்தாவும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரிலிருந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கலைஞர் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய முக்கிய தளமாக திருவாரூர் மாவட்டம் கருதப்படுகிறது. அவர் திருவாரூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த அரசியல் பாரம்பரியத்தை தொடரும் வகையில் உதயநிதி திருவாரூரில் இருந்து களமிறங்கினால் அது திமுகவின் முக்கிய அரசியல் வியூகமாக பார்க்கப்படுகின்றது. இதனிடையே முதல்வர் ஸ்டாலின் மீண்டும் சென்னை கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிடுவார் என்றே திமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று தேர்தல்களிலும் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்டாலின் அந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மீண்டும் அவர் அங்கு போட்டியிட உள்ளதாக தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாற்றம் குறித்து இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சமயத்தில் உதயநிதி போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…
அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள 'யுத்த அதிகாரங்கள் தீர்மானம்' (War Powers Resolution) படி, அதிபர் ஒருவர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி…