Connect with us

CINEMA

விஜயகாந்த்தின் உடலை பார்த்துவிட்டு சென்ற போது விஜய் மீது செருப்பை வீசிய நபர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

சினிமாவில் மட்டுமின்றி, அரசியலிலும் கால்பதித்து கலக்கியவர் நடிகர் விஜயகாந்த். இவர் செய்த தர்மங்கள் ஏராளம் .எல்லோரிடமும் அன்பாகவும், அனைவரையும் சரிசமமாகவும் நடத்தக்கூடிய நடிகர் விஜயகாந்தின் மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 150 படங்களுக்கும் மேல் தன் வாழ்நாளில் நடித்த நடிகர் விஜயகாந்த் 2015க்கு பிறகு எந்தவொரு திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

   

தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கி அதன் தலைவராக மட்டுமே செயல்பட்டு வந்த இவர், அரசியலில் செய்த சாதனைகளும் ஏராளம். இதைத்தொடர்ந்து அவர் தனது உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே  ஓய்வெடுத்து வந்தார். வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. சில வாரங்களுக்கு முன்னால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரண நலம் பெற்று வீடு திரும்பியிருந்தார்.

Vijayakanth

#image_title

இந்நிலையில் கொரோனா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு நேற்று காலை 6 மணி அளவில் அவர் மரணம் அடைந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ளது. அவருக்கு  திரையுலகினரும், ரசிகர்களும், தொண்டர்களும் என பலரும் தற்பொழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  தற்பொழுது அவரின் உடல் சென்னை அண்ணா சாலையில் உள்ள தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நடிகர் விஜய் கேப்டன் உடலருகே நின்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு கண்கலங்கும்  வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்பொழுது  அஞ்சலி செலுத்தி விட்டு வந்த நடிகர் விஜயின்  திடீரென யாரோ ஒருவர் செருப்பு தூக்கி அடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முதலில் இது எடிட்டிங் என கூறப்பட்ட நிலையில், தற்போது அது எடிட்டிங் இல்லை, உண்மை தான் என கூறி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top