கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து வந்த ரயில் மோதி இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விபத்தின் போது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
