ஐபிஎல் போட்டியில் மாந்திரீகமா…? சிவம் துபே அவுட்டாக SRH ரசிகர் செய்த வேலை….. இன்பிசிசிஐ-யிடம் சிஎஸ்கே புகார்…?

By Devi Ramu on சித்திரை 20, 2026

Spread the love

ஹைதராபாத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது, ஹைதராபாத் ரசிகர் ஒருவர் மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவம் துபே விக்கெட்டை வீழ்த்துவதற்காக அந்த ரசிகர் ‘பிளாக் மேஜிக்’ செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (BCCI) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படும் செய்திகள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.

பரபரப்பான இந்தப் போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஏற்கனவே தொடர் தோல்விகளால் துவண்டுள்ள சிஎஸ்கே ரசிகர்களுக்கு, இந்த மாந்திரீகப் புகார் செய்தி மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. விளையாட்டு மைதானத்தில் இத்தகைய செயல்கள் அனுமதிக்கப்படக் கூடாது என ஒருதரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் சிஎஸ்கே நிர்வாகம் உண்மையில் புகார் அளித்துள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை