மும்பை காவல் நிலையத்தையே அதிர வைத்த இந்த வினோத மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம், நட்பின் பெயரால் அரங்கேறிய ஒரு கொடூரமான அத்துமீறலாகும். தனது நண்பனுக்குக் கொடுத்த ஒரு விபரீத வாக்குறுதிக்காக, மணமகன் தனது முதலிரவு அறையையே நண்பனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. “உனக்கு முதலில் திருமணம் நடந்தால், உனது மனைவியுடன் முதல் இரவை நான் தான் கொண்டாடுவேன்” என்று நண்பன் கேட்டதற்கு, “நீ என் உயிர் நண்பன், உனக்காக எதையும் செய்வேன்” என்று மணமகன் சம்மதித்ததுதான் இந்த விபரீதத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
வாக்குறுதி அளித்தபடி, முதலிரவு அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு, தனது நண்பனை உள்ளே அனுப்பி வைத்துள்ளார் மணமகன். “எனது குரல் அவளுக்குத் தெரியும், எனவே ஒரு வார்த்தை கூட பேசாதே, விளக்கை ஏற்றிவிடாதே” என்று நண்பனுக்குக் கட்டளையிட்டும் உள்ளார். இருட்டைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நண்பன், மணமகன் போலவே நடித்து அந்தப் பெண்ணுடன் முதலிரவைக் கொண்டாடியுள்ளான்.
அதிகாலை 3 மணியளவில் தாகம் எடுத்த அந்த மணப்பெண், தண்ணீர் குடிப்பதற்காக எழுந்துள்ளார். கணவன் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அவர் விளக்கை ஏற்றியபோது, அங்கிருந்த காட்சியைக் கண்டு நிலைகுலைந்து போனார். படுக்கையில் இருந்தது தனது கணவன் அல்ல, அவரது நண்பன் என்பதை அறிந்ததும் அலறித் துடித்தார். உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மனைவியை நண்பனுக்கு அடகு வைத்த அந்த கணவனும், அத்துமீறிய நண்பனும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
