BREAKING: உருவாகிறது புதிய புயல் சின்னம்.. மீண்டும் வந்தது அலர்ட்…!

By Nanthini on ஐப்பசி 23, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நல்வாய்ப்பாக புயலாக மாறாமல் கரையை கடந்த நிலையில் தற்போது புதிதாக புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.