தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய் தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைக்கக் கூடாது என ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தில், அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் தவெக பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, விஜய் தனது பெரும்பான்மையை 2 நாட்களில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அவருக்குக் கால அவகாசம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
