உத்தரப் பிரதேச மாநிலம் ஓரையா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தாய் குரங்கு ஒன்று தனது இறந்த குட்டியை மடியில் கிடத்தி, அதற்கு உயிர் கொடுக்க போராடும் நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதர்களைப் போலவே விலங்குகளும் தங்கள் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அளவற்ற பாசத்தையும், பிரிவால் ஏற்படும் தவிப்பையும் இந்த வீடியோ பார்ப்பவர் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது.
அந்த வீடியோவில், குட்டி குரங்கு இறந்துவிட்டதை உணராத அந்தத் தாய் குரங்கு, அதன் உடலைக் கட்டியணைத்துக் கொண்டும், அதன் முகத்தைத் தடவிக்கொடுத்தும், எப்படியாவது எழுந்துவிடாதா என்ற ஏக்கத்துடன் காணப்படுகிறது. சுற்றியுள்ள மக்கள் அதைக் கவனித்து அதற்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க முயன்றபோதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது முழு கவனத்தையும் இறந்த குட்டியின் மீதே வைத்து கதறி அழுதுகொண்டிருக்கிறது.
விலங்குகளின் உணர்ச்சிகரமான பக்கத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து, “தாயின் பாசத்திற்கு மனிதன், மிருகம் என்ற பாகுபாடே இல்லை” என்று உருக்கமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். பார்ப்போரின் கண்களைக் குளமாக்கும் இந்தத் தாய்ப் பாசக் காட்சி, சமூக ஊடகங்களில் தற்போது பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…