உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் சமூக ஊடகப் பிரபலமான உஸ்மான் பார்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒரு நபரைத் தாக்கி, ரிக்ஷாவில் வைத்து காவல் நிலையத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொராதாபாத்தின் பாக்பாடா பகுதியில் உஸ்மான் பார்தி மற்றும் அவரது குழுவினர் ‘ரீல்ஸ்’ (Reels) எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த சில இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றவே, உஸ்மான் பார்தியின் ஆதரவாளர்கள் ஒரு இளைஞரைத் தாக்கி, அவரை ரிக்ஷாவில் அமர வைத்துப் பொதுமக்களுக்கு முன்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
A man was beaten up by aides of social media influencer Usman Bharti in #Moradabad, #UttarPradesh.
His procession was taken out to the police station on a rickshaw.
Now these girls are saying that the man was making obscene comments online. pic.twitter.com/WeQ5ERzjhv
— Hate Detector 🔍 (@HateDetectors) January 29, 2026
அந்த நபர் இணையதளத்தில் தங்களைப் பற்றி ஆபாசமான கருத்துக்களைப் பதிவிட்டதாகவும், தங்களை நோக்கித் தவறான சைகைகளைச் செய்ததாகவும் உஸ்மான் பார்தியின் குழுவில் இருந்த பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண மோதல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மொராதாபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு நபரைத் தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றது குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
