விசித்திர சம்பவம்…! நாய்க்குட்டியை கவ்வி பிடித்த சிறுத்தை… அடுத்து என்னாச்சு தெரியுமா…? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் நடுநிசியில் கோயில் அருகே உலா வந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த நாய்களைத் துரத்தியுள்ளது. சிறுத்தையைக் கண்டதும் பெரிய நாய்கள் அனைத்தும் அலறியடித்து ஓடிவிட்ட நிலையில், சிறிய நாய்க்குட்டி ஒன்று சிறுத்தையிடம் சிக்கியது.

அந்த நாய்க்குட்டியைச் சிறுத்தை தனது வாயால் கவ்விப் பிடித்ததால், அது இரையாகிவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாகச் சிறுத்தை அந்த நாய்க்குட்டியை எந்தவிதக் காயமுமின்றி அப்படியே கீழே விட்டுவிட்டு அங்கிருந்து அமைதியாக நகர்ந்து சென்றது.

   

இந்த விசித்திரமான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தையின் இந்தச் செயலுக்கு அதன் இரக்க உணர்ச்சி காரணமா அல்லது வேட்டையாடும் சூழல் அமையவில்லையா என விலங்கியல் ஆர்வலர்கள் விவாதித்து வரும் வேளையில், அப்பகுதி மக்கள் சிறுத்தையின் ஊடுருவலால் தொடர்ந்து அச்சத்தில் உறைந்துள்ளனர்.