“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

By Muthu Mani on ஆனி 18, 2026

Spread the love

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்களும், வரும் 30.09.2026க்குள் தேர்ச்சி பெறவிருக்கும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 01.04.2026 அன்று விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்; எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு. இப்பதவிகளுக்கு, தகுதியான நபர்கள் கணினி வழி முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று முக்கிய படிநிலைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்; விருப்பமுள்ளவர்கள் sbi.co.in/web/careers/current-openings அல்லது ibpsreg.ibps.in/sbipojun26 ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகத் தங்களது விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். பொது, ஓபிசி மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் 750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அதேசமயம் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் ஆன்லைன் வழியே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, வரும் 08.07.2026-க்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.